ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி


ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 3 Sep 2019 10:15 PM GMT (Updated: 3 Sep 2019 9:21 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சி அளித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை அந்தியூரில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. பின்னர் மதியம் 3 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் ஆப்பக்கூடல், எண்ணமங்கலம், பருவாச்சி, அத்தாணி உள்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை தூறல் மழை பெய்தது.

அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றவட்டார பகுதிகளான பூதப்பாடி, பூனாச்சி, சித்தார் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 3.15 மணி முதல் 3.45 மணி வரை மழை பெய்தது. பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது. மேலும் கவுந்தப்பாடி, கோபி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய பகுதிகளிலும் நேற்று மாலை மழை தூறிக்கொண்டே இருந்தது. இதன்காரணமாக குளிர்ந்த காற்று வீசியது

Next Story