திருமணமான 2 மாதத்தில், கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை


திருமணமான 2 மாதத்தில், கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 8 Sep 2019 10:30 PM GMT (Updated: 8 Sep 2019 10:12 PM GMT)

திருமணமான 2 மாதத்தில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் அருகே குரும்பலூரை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி கீர்த்தனா(வயது 19). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கீர்த்தனாவுக்கு கடந்த சில மாதங்களாகவே தீராத வயிற்று வலி இருந்து வந்ததாம். இதனால் அவதியடைந்த கீர்த்தனா சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்ததில் மயங்கி கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கீர்த்தனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கீர்த்தனாவுக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story