செலவுக்கு பணம் தராததால் தாயை கத்தியால் குத்திக்கொன்ற மகன் கைது


செலவுக்கு பணம் தராததால் தாயை கத்தியால் குத்திக்கொன்ற மகன் கைது
x
தினத்தந்தி 11 Sep 2019 10:45 PM GMT (Updated: 11 Sep 2019 8:20 PM GMT)

செலவுக்கு பணம் தராததால் தாயை கத்தியால்குத்திக்கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

நல்லூர்,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர், காசிபாளையத்தில்இருந்து மணியக்காரம் பாளையம் செல்லும் வழியில் வசித்து வருபவர் ஆரோக்கியமேரி (வயது 47), இவரது கணவர் மகேஷ் 10ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு ரஞ்சனி, ஜீவிதா என்ற 2 மகள்களும், ஹர்ஜீத் (22) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

பெரிய மகள் ரஞ்சனி கணவருடன் கரூரிலும், இளையமகள் கோவையிலும் வசித்து வருகிறார்கள்.இந்தநிலையில் மகன்ஹர்ஜீத்துடன் மணியக்காரம்பாளையம் சாலையில் உள்ள 2 அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். ஹர்ஜீத் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளான். இதனால் செலவுக்கு பணம் கேட்டு அடிக்கடி ஆரோக்கியமேரியிடம் தகராறு செய்துள்ளார்.

கடந்த 9-ந்தேதி பிற்பகல் 3 மணியளவில் இது குறித்து பிரச்சினை எழுந்துள்ளது. ஆரோக்கியமேரி பணம் தர மறுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த ஹர்ஜீத் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து ஆரோக்கிய மேரியின் மார்பில் குத்தியுள்ளார்.

ரத்தம் வெளியேறி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் உறவினருக்கு போன் செய்து நடந்ததை கூறியுள்ளார். அவர்கள் வருவதற்குள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். வீ்ட்டின் உள் அறை ஒன்றில் ஹர்ஜீத் பதுங்கி இருந்துள்ளார்.

இது குறித்து ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து ஹர்ஜீத்தை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டர். ஆரோக்கியமேரியின் உடலை பிரேதபரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று ஹர்ஜீ்த்தை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

Next Story