அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைத்தால் நடவடிக்கை - கலெக்டர் ஆனந்த் எச்சரிக்கை


அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைத்தால் நடவடிக்கை - கலெக்டர் ஆனந்த் எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 Sep 2019 10:30 PM GMT (Updated: 11 Sep 2019 9:18 PM GMT)

அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் கூறினார். திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர்,

உரிய அனுமதியின்றி விதிமுறைகளை மீறி அரசியல் கட்சிகள், திருவிழா மற்றும் திருமண நிகழ்ச்சிகள் போது விளம்பர பேனர்கள் வைக்கப்படும் பட்சத்தில் சாலைகளில் வாகன போக்குவரத்து நெருக்கடி மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு போன்றவை ஏற்படுகிறது. ஆதலால் விளம்பர பேனர் வைக்க நீதிமன்றம் தடை செய்துள்ளது.

எனவே திருவாரூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெற்று விளம்பர பேனர்கள் வைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. உரிய அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story