பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம் - திருத்துறைப்பூண்டியில் நடந்தது


பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம்  - திருத்துறைப்பூண்டியில் நடந்தது
x
தினத்தந்தி 13 Sep 2019 10:15 PM GMT (Updated: 13 Sep 2019 7:46 PM GMT)

பயிர்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி திருத்துறைப்பூண்டியில் விவசாயிகள் திருயோடு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாயிகள் சங்கத்தினர் 2018-2019-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், நடப்பாண்டு சம்பா சாகுபடிக்கான விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்களை அரசு கூட்டுறவு சங்கங்களின் மூலம் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானியங்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருவோடு ஏந்தி பட்டை நாமம் போட்டு கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் வீராச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கலியபெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், சங்கத்தின் ஒன்றிய செயலாளர் மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபால கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 2018-2019-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். நகர தலைவர் பன்னீர்செல்வம், நகர துணை செயலாளர் தமிழ்மணி, மாவட்ட பொருளாளர் சாமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், நகர செயலாளர் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகரகுழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கர், வக்கீல் செந்தில்குமார், பசுபதி, ரவீந்திரன், கார்த்தி, ராஜேஷ், செல்வம், வீரசேகரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story