லாலாபேட்டை அருகே, மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; தொழிலாளி பலி - 2 பேர் படுகாயம்


லாலாபேட்டை அருகே, மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; தொழிலாளி பலி - 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 13 Sep 2019 10:15 PM GMT (Updated: 13 Sep 2019 7:49 PM GMT)

லாலாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

லாலாபேட்டை, 

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள கணக்கம்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 48) கூலிதொழிலாளி இவர், நேற்று முன்தினம் இரவு லாலாபேட்டையில் இருந்து கணக்கம் பட்டிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

சிவலிங்கபுரம் என்ற இடத்தில் சென்றபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் மேலவிட்டுக்கட்டியை சேர்ந்த சிவசக்தி, பிரேம்குமார் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். இந்தநிலையில் எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த 3 பேரையும் ஆம்புலன்சு மூலம் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாஸ்கர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து சிவசக்தி, பிரேம்குமார் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story