அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி மாணவ-மாணவிகள் பங்கேற்பு
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டியை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று தொடங்கி வைத்தார்.
கரூர்,
கரூரில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டியை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று தொடங்கி வைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 13 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 75 மாணவ, மாணவிகளும், 15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 120 மாணவ, மாணவிகளும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 60 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். இதில் முதல் 3 இடங்களை பிடித்த வர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பாதுகாப்பிற்காக மருத்துவ குழு மற்றும் அவசர கால வாகன வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. இதில் மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி ராஜேந்திரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கரூரில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டியை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று தொடங்கி வைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 13 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 75 மாணவ, மாணவிகளும், 15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 120 மாணவ, மாணவிகளும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 60 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். இதில் முதல் 3 இடங்களை பிடித்த வர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பாதுகாப்பிற்காக மருத்துவ குழு மற்றும் அவசர கால வாகன வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. இதில் மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி ராஜேந்திரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story