திருமருகலில் ஆறுகளில் உடைப்பை சரி செய்ய மணல் மூட்டைகள் தயார் அதிகாரிகள் நடவடிக்கை


திருமருகலில் ஆறுகளில் உடைப்பை சரி செய்ய மணல் மூட்டைகள் தயார் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 Sep 2019 11:00 PM GMT (Updated: 14 Sep 2019 8:01 PM GMT)

திருமருகலில் ஆறுகளில் உடைப்பை சரி செய்ய மணல் மூட்டைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதியில் அரசலாறு, திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான் ஆறு, வடக்கு புத்தாறு, தெற்கு புத்தாறு, வளப்பாறு, நரிமணி ஆறு, ஆழியான் ஆறு, பிராவடையனாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகளுக்கு காவிரி நீர் வந்து சேர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்த ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் வரும் போதும், மழை காலங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆறுகளின் கரைகள் உடைந்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க பொதுப்பணித்துறை மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மணல் மூட்டைகள் தயார்

நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான திருமருகல் ஒன்றிய பகுதியில் உள்ள அனைத்து ஆறுகள் மற்றும் வடிகால்களின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகாமல் இருக்க பொதுப்பணித்துறை தஞ்சை கீழ் காவிரி வடிநில கோட்ட உயர் அதிகாரிகளின் அறிவுரையின்படி நன்னிலம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி மேற்பார்வையில், திருமருகல் உதவி பொறியாளர்கள் ரெத்தினவேல், சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருமருகல் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன்பு மணல் மூட்டைகள் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 

Next Story