கோவிலில் உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையன் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் விசாரணை


கோவிலில் உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையன் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் விசாரணை
x
தினத்தந்தி 15 Sep 2019 11:00 PM GMT (Updated: 15 Sep 2019 7:50 PM GMT)

களியக்காவிளை அருகே கோவிலில் உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையனை போலீசார் தேடிவருகின்றனர்.

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே மூவாட்டுகோணம் பகுதியில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வழிபாடு நடத்த வருவார்கள். அதேபோல நேற்று முன்தினம் மாலை நேரத்தில் பக்தர்கள் கோவிலுக்கு வந்த போது அங்குள்ள உண்டியலை காணவில்லை. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதனை தொடர்ந்து பக்தர்கள் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே நிர்வாகிகள் விரைந்து வந்து பார்த்த போது, உண்டியல் திருடு போனது தெரிய வந்தது.

வலைவீச்சு

இதனையடுத்து நிர்வாகிகளும், பளுகல் போலீசாரும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். கேமராவில் மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து உண்டியலை அலேக்காக தூக்கிச் செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story