பெண்ணாடம் அருகே திரவுபதியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
பெண்ணாடம் அருகே திரவுபதியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கதவு பூட்டு நேற்று காலை உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
பின்னர் இதுபற்றி பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு நடந்த கோவிலை பார்வையிட்டனர்.
வலைவீச்சு
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நள்ளிரவில் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. ஆனால் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கதவு பூட்டு நேற்று காலை உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
பின்னர் இதுபற்றி பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு நடந்த கோவிலை பார்வையிட்டனர்.
வலைவீச்சு
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நள்ளிரவில் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. ஆனால் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story