கொடைக்கானலில் கோர்ட்டில் வாதாடிக் கொண்டிருந்த வக்கீல் மயங்கி விழுந்து சாவு


கொடைக்கானலில் கோர்ட்டில் வாதாடிக் கொண்டிருந்த வக்கீல் மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 17 Sep 2019 10:45 PM GMT (Updated: 17 Sep 2019 9:00 PM GMT)

கொடைக்கானலில் கோர்ட்டில் வாதாடிக் கொண்டிருந்த வக்கீல் மயங்கி விழுந்து சாவு.

கொடைக்கானல்,

திண்டுக்கல் நகர் சாலைரோட்டை சேர்ந்தவர் ரகுபதி (வயது 82). வக்கீலான இவர், ஒரு வழக்கு விஷயமாக நேற்று பகல் 12.30 மணியவில் கொடைக்கானல் கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் திடீரென கோர்ட்டில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்த வக்கீல்கள் அவரை காரில் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து வக்கீல்கள், அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவரது மகள் பீனா (45) கொடைக்கானலுக்கு வந்தார். பின்னர் அவர் தனது தந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் ஒப்படைக்க வேண்டும் என்று போலீசாரிடம் மனு அளித்தார். இதையடுத்து அவருடைய சாவில் சந்தேகம் இல்லாததால் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுபதியின் உடலை மகளிடம் ஒப்படைத்தனர்.

Next Story