நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் - கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு


நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் - கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Sep 2019 12:00 AM GMT (Updated: 18 Sep 2019 10:08 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் பட்டியலை கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

தூத்துக்குடி, 

தமிழகத்தில் அனைத்து கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசு அம்மா திட்ட முகாமை நடத்தி வருகிறது. இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடக்கிறது. இந்த வாரத்துக்கான முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா திம்மராஜபுரத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா மீனாட்சிபுரம், செக்காரக்குடி பகுதி 2 கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகா மானாடு தண்டுபத்து கிராமத்திலும், சாத்தான்குளம் தாலுகா புதுக்குளம்-செட்டியிருப்பு கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகா பிச்சைத்தலைவன்பட்டியிலும், விளாத்திகுளம் தாலுகா கே.தங்கம்மாள்புரத்திலும், எட்டயபுரம் தாலுகா வேலிடுபட்டியிலும், ஓட்டப்பிடாரம் தாலுகா சந்திரகிரியிலும், கயத்தார் தாலுகா நாகம்பட்டியிலும், ஏரல் தாலுகா இருவப்பபுரம்-1 கிராமத்திலும் அம்மா திட்ட முகாம் நடக்கிறது.

இந்த முகாமில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு-இறப்பு சான்றுகள், சாதிச்சான்று மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கை குறித்து மனு கொடுக்கலாம். இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story