பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வேன் டிரைவர் பலி


பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வேன் டிரைவர் பலி
x
தினத்தந்தி 21 Sep 2019 9:45 PM GMT (Updated: 21 Sep 2019 8:16 PM GMT)

பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வேன் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

நெல்லை, 

பாளையங்கோட்டை அருகே உள்ள பொட்டல் திருவண்ணநாதபுரத்தை சேர்ந்தவர் ஆண்டி. இவருடைய மகன் மாடசாமி (வயது 32). இவர் சொந்தமாக வேன் ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் மாடசாமி பாளையங்கோட்டை அருள் நகரில் உள்ள பெற்றோரை சந்திக்க சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

பொட்டல் அருகே 4 வழிச்சாலையில் ஒரு குளக்கரையில் சென்று கொண்டிருந்த போது மாடசாமியின் மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறியது.

இதனால் சாலையோரத்தில் நிறுவப்பட்டிருந்த எச்சரிக்கை கம்பியில் அவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மாடசாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மாடசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story