அய்யூர் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது


அய்யூர் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது
x
தினத்தந்தி 22 Sep 2019 11:00 PM GMT (Updated: 22 Sep 2019 8:57 PM GMT)

அய்யூர் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்றவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் வனப்பகுதியில் வன விலங்குகள் வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தேன் கனிக்கோட்டை வனத்துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

அதன் பேரில் வனச்சரகர் சுகுமார், வனவர் கதிரவன் மற்றும் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அய்யூர் வனப்பகுதியில் கூச்சுவாடி பகுதியில் உள்ள ஜோடு குட்டை பொம்மனஅள்ளி மாரியம்மன் கோவில் அருகில் ஒருவர் கன்னி வலைகளுடன் சென்றார். அவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அபராதம்

அப்போது அவர் சித்தலிங்க கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த மாரப்பா (வயது 35), என்பதும், வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை மாவட்ட வன அலுவலகத்தில் ஆஜர்படுத்தினார்கள். வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மாரப்பாவுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.

Next Story