மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 24 Sep 2019 10:15 PM GMT (Updated: 24 Sep 2019 7:28 PM GMT)

குன்றத்தூரில், மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியாயினர்.

பூந்தமல்லி,

சென்னை முகப்பேரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). கார் டிரைவர். குன்றத்தூரில் உள்ள தனது நண்பர் நவீன் பாலமுருகன்(21), என்பவரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றார். மோட்டார் சைக்கிளில் நவீன் பாலமுருகனை ஏற்றிக்கொண்டு குன்றத்தூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். நவீன் பாலமுருகன் காயங்களுடன் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Next Story