சீர்காழியில் ரூ.22 லட்சத்தில் சிறுபாலங்கள் கட்டும் பணி போக்குவரத்து மாற்றம்


சீர்காழியில் ரூ.22 லட்சத்தில் சிறுபாலங்கள் கட்டும் பணி போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 25 Sep 2019 10:45 PM GMT (Updated: 25 Sep 2019 7:16 PM GMT)

சீர்காழியில் ரூ.22 லட்சத்தில் சிறுபாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சீர்காழி,

சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் மழை காலங்களில் அதிகளவு மழைநீர் சாலையில் குளம்போல் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. மேலும் மழைநீர் தேங்கி நிற்பதால் சாலைகளும் சேதமடைந்தது. இதனால் மழை காலங்களில் எளிதாக மழைநீர் வடியும் வகையில் பிடாரி வடக்கு வீதியில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சிறுபாலம் (பாக்ஸ் கல்வெர்ட்) கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதேபோல் சீர்காழி ஈசானியத்தெருவிலும் மழைநீர் விரைவாக வடியும் வகையில் சிறுபாலம் கட்டவும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு இரு பாலங்களுக்கும் ரூ.22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சிறுபாலங்கள் கட்டும் பணி

அதன்படி பிடாரி வடக்கு வீதியில் முதல் கட்டமாக சாலையின் குறுக்கே சிறுபாலம் கட்டும் பணி தொடங்கியது. இதற்காக சாலையின் குறுக்கே பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் வெட்டப்பட்டு, உடனடியாக கான்கிரீட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் இளம்வழுதி, உதவி கோட்ட பொறியாளர் சூரியமூர்த்தி, உதவி பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது இரவு, பகலாக பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு விடப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணி நடைபெறுவதால் பிரதான சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Next Story