சிங்கம்புணரியில் நீதிமன்றம் அமைக்கும் பணி; நீதிபதி ஆய்வு


சிங்கம்புணரியில் நீதிமன்றம் அமைக்கும் பணி; நீதிபதி ஆய்வு
x
தினத்தந்தி 27 Sep 2019 10:15 PM GMT (Updated: 27 Sep 2019 4:45 PM GMT)

சிங்கம்புணரியில் நீதிமன்றம் அமைய உள்ள இடத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட நீதிபதி ஆய்வு மேற்கொண்டார்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியங்களை இணைத்து சிங்கம்புணரி தனி தாலுகாவாக 2016-ல் சட்டசபையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இந்தநிலையில் சிங்கம்புணரி பேரூராட்சிக்குட்பட்ட நகர மண்டபத்தில் கடந்த 23-5-2017-ல் முதல் தற்காலிக தாலுகா அலுவலகம் அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் தாலுகாக அலுவலகத்திற்கு தனி கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 13-6-2019 முதல் அதில் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்தநிலையில் சிங்கம்புணரி தாலுகாவிற்கு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைய உள்ள நிலையில் நீதிமன்றத்திற்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து நீதிமன்றம் அமைக்கும் பணி சிங்கம்புணரி பேரூராட்சிக்குட்பட்ட நகர மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை 2-வது முறையாக மாவட்ட அமர்வு நீதிபதி கார்த்திகேயன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா, பொறியாளர்கள் செல்லையா, கண்ணன் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் மற்றும் சிங்கம்புணரி பகுதி வக்கீல்கள் உடனிருந்தனர்.

Next Story