கிள்ளை அருகே, தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை - மனைவி இறந்த வேதனையில் விபரீத முடிவு


கிள்ளை அருகே, தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை - மனைவி இறந்த வேதனையில் விபரீத முடிவு
x
தினத்தந்தி 30 Sep 2019 10:00 PM GMT (Updated: 30 Sep 2019 8:16 PM GMT)

கிள்ளை அருகே மனைவி இறந்த வேதனையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம், 

சிதம்பரம் அடுத்த கிள்ளை அருகே உள்ள உத்தமசோழமங்களம் ராதாவிளாகம் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 65), தொழிலாளி. இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் காசிநாதன் யாரிடமும் சரியாக பேசாமல் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து அவர் குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காசி நாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கிள்ளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story