திருச்சியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி 32 அணிகள் பங்கேற்பு


திருச்சியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி 32 அணிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 12 Oct 2019 10:45 PM GMT (Updated: 12 Oct 2019 8:25 PM GMT)

மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி திருச்சி கல்லுக்குழி ரெயில்வே மைதானத்தில் நேற்று தொடங்கியது.

திருச்சி,

மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி திருச்சி கல்லுக்குழி ரெயில்வே மைதானத்தில் நேற்று தொடங்கியது. நாக்-அவுட் முறையில் நடத்தப்படும் இந்த போட்டியில் திருச்சி, சென்னை, கோவை, தேனி, திண்டுக்கல், விழுப்புரம், தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 32 அணிகள் கலந்து கொண்டு மோதின. பரபரப்பாக நடந்து வரும் இந்த போட்டிகளின் இறுதி போட்டியும், அதனை தொடர்ந்து பரிசளிப்பு விழாவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடக்கிறது. முன்னதாக நேற்று காலை கால்பந்து போட்டியை அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். போட்டிக்கான ஏற்பாடுகளை எல்லோ ரோஸ் கால்பந்து கிளப் சார்பில் செய்து இருந்தனர்.


Next Story