அரசு பஸ் மோதி வாலிபர் பலி


அரசு பஸ் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 14 Oct 2019 10:30 PM GMT (Updated: 14 Oct 2019 8:01 PM GMT)

அரசு பஸ், வில்சன்வினோவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட வில்சன்வினோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கீழப்பழுவூர்,

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தை சேர்ந்தவர் வில்சன்வினோ(வயது 23). இவர் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள உரக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு புறப்பட்டு, தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஏலாக்குறிச்சி பெட்ரோல் நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுவிட்டு வெளியே வரும்போது, தஞ்சையிலிருந்து ஏலாக்குறிச்சி நோக்கி வந்த அரசு பஸ், வில்சன்வினோவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட வில்சன்வினோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமானூர் போலீசார் வில்சன்வினோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story