மெஞ்ஞானபுரத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


மெஞ்ஞானபுரத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 22 Oct 2019 9:45 PM GMT (Updated: 22 Oct 2019 9:37 PM GMT)

மெஞ்ஞானபுரத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா விசாரணை நடத்தி வருகிறார்.

மெஞ்ஞானபுரம், 

மெஞ்ஞானபுரத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா விசாரணை நடத்தி வருகிறார்.

கார் டிரைவர்

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் ஒய்.எம்.சி.ஏ. தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 40). கார் டிரைவர்.

இவருடைய மனைவி எலிசபெத் (35). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த எலிசபெத் சம்பவத்தன்று மெஞ்ஞானபுரத்தில் உள்ள தன்னுடைய தாயாரின் வீட்டுக்கு சென்று, தூக்குப்போட்டு கொண்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

உதவி கலெக்டர் விசாரணை

பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் எலிசபெத் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எலிசபெத்துக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால், இதுகுறித்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story