ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் சாவு


ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் சாவு
x
தினத்தந்தி 26 Oct 2019 10:51 PM GMT (Updated: 26 Oct 2019 10:51 PM GMT)

ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலியானார்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 30). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நேற்று சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் ஆங்காங்கே கழிவுநீர் செல்கிறது. சுகாதார துறையினர் பெயரளவுக்கு மட்டுமே அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்வதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சுகாதாரத்துறையினர் பிள்ளைப்பக்கம் ஊராட்சியில் உடனடியாக முகாம் அமைத்து முறையாக பிளச்சிங் பவுடர் தெளித்து, அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கி சுகாதார பணி மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story