டெங்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை


டெங்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Oct 2019 10:30 PM GMT (Updated: 30 Oct 2019 9:57 PM GMT)

கிருஷ்ணராயபுரம் அடுத்த புலியூர் பேரூராட்சியில் டெங்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பணி நடைபெற்றது.

கிருஷ்ணராயபுரம்,

கிருஷ்ணராயபுரம் அடுத்த புலியூர் பேரூராட்சியில் டெங்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பணி நடைபெற்றது. இதையொட்டி புலியூர் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மழைநீர் தேங்கிய இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் கொசுமருந்து அடிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வு பற்றி எடுத்துக்கூறப்பட்டது. மேலும் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகளில் குளோரின் பவுடர் தெளிக்கப்பட்டது. இதில் பேரூராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story