பலத்த மழையால் கோரையாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது


பலத்த மழையால் கோரையாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
x
தினத்தந்தி 31 Oct 2019 10:30 PM GMT (Updated: 31 Oct 2019 7:26 PM GMT)

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது.

அரியலூர்,

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய பெய்த மழையால் கோட்டைக்காட்டிற்கும், கடலூர் மாவட்டம் ஆவினன் குடிக்கும் இடையே செல்லும் வெள்ளாற்றில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் 2 மாவட்டத்திற்கும் இடையேயான போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது. பலத்த மழைக்கு பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலை அடிவாரத்தில் உள்ள கோரையாறு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அந்த அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

திருமானூர்-3, ஜெயங்கொண்டம்-12, செந்துறை-1.2.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பெரம்பலூர்-11, செட்டிகுளம்-24, பாடாலூர்-43, அகரம்சீகூர்-38, லப்பைகுடிக் காடு-15, புதுவேட்டக்குடி-18, எறையூர்-22, கிருஷ்ணாபுரம்-20, தழுதாழை-24, வி.களத்தூர்-7, வேப்பந்தட்டை -12.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

Next Story