புதுப்பேட்டை அருகே தனித்தனி சம்பவம்: வாலிபர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை


புதுப்பேட்டை அருகே தனித்தனி சம்பவம்: வாலிபர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 Nov 2019 10:30 PM GMT (Updated: 9 Nov 2019 8:23 PM GMT)

புதுப்பேட்டை அருகே தனித்தனி சம்பவத்தில் வாலிபர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே உள்ள கொக்குப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் விஜயதேவன் (வயது 27). சம்பவத்தன்று இவர் அதேபகுதியில் நிலத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விஜயதேவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயதேவன் உடல்நலக்கோளாறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுப்பேட்டை அடுத்த அம்மாபேட்டையை சேர்ந்தவர் முத்து (45). இவருடைய மனைவி கற்பகவள்ளி (32). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று முத்து வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story