சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோருக்கு விருப்ப மனுக்கள் - வீரபாண்டி ராஜா வழங்கினார்


சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோருக்கு விருப்ப மனுக்கள் - வீரபாண்டி ராஜா வழங்கினார்
x
தினத்தந்தி 15 Nov 2019 10:15 PM GMT (Updated: 15 Nov 2019 6:13 PM GMT)

சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோருக்கு விருப்ப மனுக்களை வீரபாண்டி ராஜா வழங்கினார்

சேலம்,

சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு அதற்கான விருப்ப மனுக்கள் வினியோகம் புதிய பஸ்நிலையம் எதிரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் தொடங்கியது. இதில் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா கலந்து கொண்டு போட்டியிட விரும்புபவர்களுக்கு அதற்கான விண்ணப்ப மனுக்களை வழங்கினார். 

இதில் சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆத்தூர், வீரபாண்டி, கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த தி.மு.க.வினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவங்களை பெற்றுச்சென்றனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சந்திரமோகன், ஒன்றிய செயலாளர்கள் பாரப்பட்டி சுரே‌‌ஷ் குமார், வெண்ணிலா சேகர், மாணிக்கம், விஜயகுமார், செழியன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story