கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்த 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது


கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்த 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 19 Nov 2019 10:15 PM GMT (Updated: 19 Nov 2019 7:16 PM GMT)

கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்த 3 சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசன் தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விளமல் சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு கும்பல் நின்று கொண்டு இருந்தது. இதனை கண்ட போலீசார் உடனே அங்கு சென்று அவர்களை சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்தபோது, அவர்கள் இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தனர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதனால் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள், வடபாதிமங்கலம் கிளியனூரை சேர்ந்த வீரபாண்டி (வயது 31), திருவாரூர் விளமல் பகுதியை சேர்ந்த சந்தோ‌‌ஷ் (18), தென்கரையை சேர்ந்த சூரியபிரகா‌‌ஷ் (19) மற்றும் 17 வயதுடைய 3 சிறுவர்கள் என்பதும், கொள்ளைடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் நின்று இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர்.

Next Story