தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் திருடிய டிரைவர் கைது


தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் திருடிய டிரைவர் கைது
x
தினத்தந்தி 20 Nov 2019 10:15 PM GMT (Updated: 20 Nov 2019 3:17 PM GMT)

தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் திருடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

குழித்துறை,

மார்த்தாண்டம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 48), அந்த பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். சிதம்பரம் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜமணி (50). இவர் சுபாசுக்கு சொந்தமான கட்டிடத்தில் ஒர்க்-ஷாப் நடத்தினார். சம்பவத்தன்று சுபாஷின் தாயார் தங்கத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து தன்னுடைய காரில் தாயாரை திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனைக்கு சுபாஷ் அழைத்து சென்றார். அந்த காரை ராஜமணி ஓட்டினார். மேலும் மருத்துவ செலவுக்காக சுபாஷ் ரூ.3 லட்சத்தை ஒரு பையில் எடுத்து சென்றார். அந்த பணத்தை காரில் வைத்துள்ளார். தாயாரை மருத்துவமனையில் காண்பித்து விட்டு வீட்டுக்கு வந்தார். தொடர்ந்து காரில் வைத்த ரூ.3 லட்சத்தை பார்த்துள்ளார். அங்கு பணத்தை காணவில்லை.

டிரைவர் கைது

இதனால் திடுக்கிட்ட அவர், பணம் பற்றி காரை ஓட்டிய ராஜமணியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என கூறியுள்ளார். இதனையடுத்து பணம் திருட்டு குறித்து சுபாஷ் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜமணியை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தான் பணம் திருடியது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story