தர்மபுரியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
தர்மபுரியில் மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலியானார்.
தர்மபுரி,
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அஜி கவுரி (வயது 22). இவர் தர்மபுரி பகுதியில் தங்கி ரெயில்வே துறையில் ஒப்பந்ததாரரிடம் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று இவர் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை பகுதியில் சக தொழிலாளர்களுடன் ரெயில்வே பாலம் அருகில் தண்டவாளத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது பணிக்கு பயன்படுத்திய மின் மோட்டாரை அஜி கவுரி தொட்டார். இதில் எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அஜி கவுரி இறந்து விட்டது தெரியவந்தது. இதனால் சக தொழிலாளர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அஜி கவுரி (வயது 22). இவர் தர்மபுரி பகுதியில் தங்கி ரெயில்வே துறையில் ஒப்பந்ததாரரிடம் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று இவர் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை பகுதியில் சக தொழிலாளர்களுடன் ரெயில்வே பாலம் அருகில் தண்டவாளத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது பணிக்கு பயன்படுத்திய மின் மோட்டாரை அஜி கவுரி தொட்டார். இதில் எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அஜி கவுரி இறந்து விட்டது தெரியவந்தது. இதனால் சக தொழிலாளர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story