அய்யலூர் அருகே, ரெயிலில் அடிபட்டு கேட் கீப்பர் பலி


அய்யலூர் அருகே, ரெயிலில் அடிபட்டு கேட் கீப்பர் பலி
x
தினத்தந்தி 22 Nov 2019 9:30 PM GMT (Updated: 22 Nov 2019 1:16 PM GMT)

அய்யலூர் அருகே ரெயிலில் அடிபட்டு ரெயில்வே கேட் கீப்பர் பரிதாபமாக இறந்து போனார்.

வடமதுரை,

அய்யலூர் அருகே உள்ள காக்காயன்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் ராசு. இவருடைய மகன் ராஜா(வயது 35). இவர் கொல்லப்பட்டி ரெயில்வே கேட்டில், கேட் கீப்பராக வேலை செய்து வந்தார். இவருக்கு ராமு என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ராஜா அய்யலூர் ரெயில்வே காலனியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். ராஜாவிற்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் ராஜாவிற்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜா மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கணவன்–மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராமு கோபித்து கொண்டு வையம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராமுவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அய்யலூருக்கு சென்று ராஜாவிடம் தகராறு குறித்து கேட்டுள்ளனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் திரும்பிச் சென்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை புத்தூர் சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகே ரெயிலில் அடிபட்ட நிலையில் ராஜா பிணமாக கிடந்தார். இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜா ரெயிலில் அடிபட்டு தான் இறந்தாரா அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story