மத்திய அரசின் மலிவு விலை மருந்துகள் அனைத்து கடைகளிலும் கிடைக்க நடவடிக்கை சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்


மத்திய அரசின் மலிவு விலை மருந்துகள் அனைத்து கடைகளிலும் கிடைக்க நடவடிக்கை சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Nov 2019 11:00 PM GMT (Updated: 25 Nov 2019 4:32 PM GMT)

மத்திய அரசின் மலிவு விலை மருந்துகள் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருந்து வணிகர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். மருந்து வணிகர் சங்க செயலாளர் சங்கர் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி மண்டல மருந்தக கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் ரவிக்குமார் கலந்து கொண்டு, தமிழக அரசு சுகாதாரத்துறை மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அறிவுறுத்தலின் பேரில், டெங்கு பற்றிய விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை அனைத்து மருந்து கடைகளிலும் ஒட்ட வேண்டும் என வலியுறுத்தினார். மாநில சங்க தலைவர் மனோகரன், மாநில செயலாளர் செல்வன், தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் சங்க வளர்ச்சி பற்றியும், சங்கத்தின் செயல்பாடு குறித்தும் விளக்கம் அளித்து பேசினர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

கூட்டத்தில் மத்திய அரசின் மலிவு விலை மருந்துகள் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மருந்து கடைகளுக்கும் டெங்கு பற்றிய விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி அதனை கடையில் பொதுமக்கள் பார்வையில் படும்படி ஒட்டப்பட வேண்டும்.

மேலும் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் அரியலூர், செந்துறை, திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், மீன்சுருட்டி, உடையார்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள், மருந்து வணிகர்கள், மருந்துகள் கட்டுப்பாட்டு துறை மருந்தக ஆய்வாளர் ஸ்ரீதேவி, மருந்துகள் மொத்த வணிகர் சங்க தலைவர் முருகன், ஒருங்கிணைப்பாளர் அக்பர்அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கார்த்திக்கேயன் நன்றி கூறினார்.

Next Story