தர்மபுரியில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை


தர்மபுரியில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Nov 2019 10:15 PM GMT (Updated: 28 Nov 2019 5:50 PM GMT)

தர்மபுரியில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தர்மபுரி, 

தர்மபுரி குள்ளனூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 27), தொழிலாளி. இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக குமார் சோகமாக காணப்பட்டார். 

இந்த நிலையில் நேற்று வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டுக்கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது குமார் இறந்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார், குமாரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

குமாரின் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story