விழுப்புரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் ரவுடி கைது


விழுப்புரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் ரவுடி கைது
x
தினத்தந்தி 30 Nov 2019 11:00 PM GMT (Updated: 30 Nov 2019 8:06 PM GMT)

விழுப்புரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் கமலா நகர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தானப்பன் மகன் கதிர் என்கிற கதிரவன் (வயது 38). ரவுடியான இவர் மீது விழுப்புரம் பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், தகராறு வழக்கு, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில வாரத்திற்கு முன்பு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக கதிரவனை விழுப்புரம் நகர போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஆனால் இவர் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய குற்றசெயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் கதிரவனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.

இதையடுத்து கதிரவனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Next Story