திருவண்ணாமலையில் அக்னி தீர்த்த குளம் நிரம்பியது


திருவண்ணாமலையில் அக்னி தீர்த்த குளம் நிரம்பியது
x
தினத்தந்தி 4 Dec 2019 10:00 PM GMT (Updated: 4 Dec 2019 4:11 PM GMT)

திருவண்ணாமலையில் அக்னி தீர்த்த குளம் நிரம்பியது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செங்கம் சாலையில் அக்னி தீர்த்த குளம் பராமரிப்பு இன்றி தூர்ந்து போய் காணப்பட்டது. மேலும் பரிகாரம் செய்பவர்கள் தங்களது உடைமைகள் மற்றும் பரிகார பொருட்களை குளத்திலேயே போட்டுவிட்டு சென்றனர். இதனால் அக்னி தீர்த்த குளம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.

இந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து கோவை மாவட்டம் பேரூர் ஆதினம் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு குளத்தை ரூ.1¼ கோடியில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. பல அடி ஆழம் கொண்ட குளத்தில் இருந்த சகதிகள், குப்பைகள் அகற்றப்பட்டன. அப்போது குளத்தின் வட பகுதியில் ஊற்று ஒன்று தென்பட்டது. அதைத்தொடர்ந்து இக்குளம் 100 சதவீதம் சீரமைக்கப்பட்டு விட்டது.

தற்போது கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அக்குளம் நிரம்பி மகா தீபமலையை பிரதிபலிக்கும் விதமாக காட்சி அளிக்கிறது. வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மகா தீபத்திருநாள் என்பதால் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம் இக்குளத்தில் அழகாய் பிரதிபலிக்க உள்ளது.

Next Story