வாணியம்பாடி பஸ் நிலையத்தில் பெண்ணிடம் ரூ.1 லட்சத்தை பறித்து சென்ற வாலிபர்கள்


வாணியம்பாடி பஸ் நிலையத்தில் பெண்ணிடம் ரூ.1 லட்சத்தை பறித்து சென்ற வாலிபர்கள்
x
தினத்தந்தி 7 Dec 2019 10:30 PM GMT (Updated: 7 Dec 2019 5:10 PM GMT)

வாணியம்பாடி பஸ் நிலையத்தில் பெண்ணிடம் இருந்து ரூ.1 லட்சத்தை வாலிபர்கள் பறித்து சென்றனர்.

வாணியம்பாடி, 

வாணியம்பாடி கச்சேரி ரோடு பகுதியை சேர்ந்தவர் ‌ஷாஜகான். இவரது மனைவி பாத்திமா (வயது 50). இவர் தனது மகளின் திருமணத்திற்காக வங்கியில் சேமித்து வைத்திருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை நேற்று காலை 11 மணி அளவில் பஸ் நிலையம் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து எடுத்து கொண்டு நடந்து சென்றார்.

பஸ் நிலையம் அருகே வரும்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் அவர் மீது மர்ம பொருளை வீசி விட்டு, அவர் கையில் வைத்திருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு, பாத்திமாவிடம் பணப்பையை பறித்து சென்ற வாலிபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் பஸ் நிலையம் அருகில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story