மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: வாலிபர் தலை நசுங்கி சாவு


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: வாலிபர் தலை நசுங்கி சாவு
x
தினத்தந்தி 8 Dec 2019 10:30 PM GMT (Updated: 8 Dec 2019 9:35 PM GMT)

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: வாலிபர் தலை நசுங்கி சாவு.

மலைக்கோட்டை,

திருச்சி உறையூர் நவாப்தோட்டத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் கண்ணன்(வயது 23). இவர் நகைப்பட்டறையில் ஆசாரியாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டையம்பேட்டை அருகே கண்ணன் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story