பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2019 11:00 PM GMT (Updated: 10 Dec 2019 6:54 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. மாநில துணை பொதுச்செயலாளர் குமார், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புவனேஸ்வரன், மண்டல செயலாளர் மோகன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், பொருளாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பருவகால ஊழியர்களுக்கு தொடர்ந்து பருவ காலத்தில் நிபந்தனை இல்லாமல் பணி வழங்க வேண்டும். ஓய்வு பெறுவோரின் அனைத்து பணபயன்களையும் தாமதப்படுத்தாமல் வழங்க வேண்டும். வரன் முறையற்ற போனஸ் பனிக்கொடை வழங்க வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டம்

சுமைப்பணி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, காப்பீட்டு திட்டம் நிலுவை தொகை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சேமிப்பு மையங்களுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story