சேர்க்காடு அருகே, குட்டையில் ஆண் பிணம் - யார் அவர்? போலீசார் விசாரணை


சேர்க்காடு அருகே, குட்டையில் ஆண் பிணம் - யார் அவர்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 Dec 2019 10:00 PM GMT (Updated: 15 Dec 2019 8:13 PM GMT)

சேர்க்காடு அருகே குட்டையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது யார் அவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிப்காட்( ராணிப்பேட்டை),

சேர்க்காடு அருகே சேர்க்காடு- காட்பாடி சாலையில் கொண்டேரிபள்ளியை அடுத்த ஒரு குட்டையில் நேற்று காலை அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனுக்கும், திருவலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story