வேப்பூர் அருகே, கார் மோதி பள்ளி மாணவன் சாவு


வேப்பூர் அருகே, கார் மோதி பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 17 Dec 2019 10:15 PM GMT (Updated: 17 Dec 2019 10:01 PM GMT)

வேப்பூர் அருகே கார் மோதி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேப்பூர், 

வேப்பூர் அருகே திருநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் பிரவீன் (வயது 8). இவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரவீன் தனது நண்பர்களுடன் அங்குள்ள ஏரிக்கு குளிக்க சென்றான். குளித்து முடித்ததும் அவர்கள் அனைவரும் தங்களது வீட்டுக்கு புறப்பட்டனர்.

அப்போது அங்குள்ள சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கார் ஒன்று பிரவீன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பிரவீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பிரவீன் பரிதாபமாக இறந்தான். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story