பஸ் மோதியது மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் சாவு


பஸ் மோதியது மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் சாவு
x
தினத்தந்தி 18 Dec 2019 10:45 PM GMT (Updated: 18 Dec 2019 8:45 PM GMT)

வண்டலூர் அருகே பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் உயிரிழந்தார்.

வண்டலூர்,

தாம்பரம் அருகே உள்ள வரதராஜபுரம் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 23), அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 19). நண்பர்களான இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

வண்டலூர் அருகே செல்லும் போது முன்னால் சென்ற மொபட் மீது பார்த்திபன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விட்டு இடதுபுறமாக திரும்பும்போது பின்னால் வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பார்த்திபன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் பார்த்திபனை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

கார்த்தி மற்றும் மொபட்டில் வந்த ரஞ்சித் ( 42) லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story