மாரண்டஅள்ளி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 16 வயது சிறுமி பலி


மாரண்டஅள்ளி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 16 வயது சிறுமி பலி
x
தினத்தந்தி 19 Dec 2019 10:30 PM GMT (Updated: 19 Dec 2019 8:55 PM GMT)

மாரண்ட அள்ளி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 16 வயது சிறுமி பலியானார்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அருகே கெண்டேயன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம், விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மகள் சவுந்தர்யா (வயது 16). இவர் 3-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி காய்ச்்சலால் கடும் அவதி அடைந்தார். உடனே அவரது பெற்றோர், மாரண்ட அள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அந்த சிறுமியை அழைத்து சென்றனர்.

அங்கு அந்த சிறுமியை பரிசோதித்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது. உடனே அந்த சிறுமியை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பலி

அங்கு சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் அந்த சிறுமியை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். இதனிைடயே நேற்று முன்தினம் இரவு அந்த சிறுமிக்கு மீண்டும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு திடீரென இறந்து விட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story