ராஜாக்கமங்கலம் அருகே மூதாட்டியிடம் 1½ பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


ராஜாக்கமங்கலம் அருகே மூதாட்டியிடம் 1½ பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Dec 2019 10:15 PM GMT (Updated: 25 Dec 2019 8:02 PM GMT)

ராஜாக்கமங்கலம் அருேக நடந்து சென்ற மூதாட்டியிடம் 1½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே பாம்பன்விளையை ேசர்ந்தவர் லிங்கசாமி. இவருடைய மனைவி தங்க லட்சுமி (வயது 72). இவர் தினமும் காலை அதே பகுதியில் உள்ள தன்னுடைய மகள் செல்வி வீட்டுக்கு பால் கொண்டு செல்வது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல தங்கலட்சுமி காலை 8 மணி அளவில் செல்வி வீட்டுக்கு பால் கொண்டு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர்.

1½ பவுன் சங்கிலி பறிப்பு

அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்த நபர் தங்கலட்சுமி கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என சத்தம் போட்டார். ஆனால் அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள் மர்ம நபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து லிங்கசாமி ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story