காதலுக்கு எதிர்ப்பு: தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை ஒரத்தநாடு அருகே பரிதாபம்
ஒரத்தநாடு அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாச்சூர் மழவராச்சிதோப்பு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையன். இவருடைய மகள் தமிழரசி (வயது21). இவர் ஒருவரை காதலித்து வந்தார். அந்த நபரின் நடவடிக்கை சரியில்லை எனக்கூறி தமிழரசியின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் காதலை கைவிடும்படியும் வீட்டில் கூறி உள்ளனர்.
இந்த நிலையில் தமிழரசி நேற்று முன்தினம் தனது காதலனிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவருடைய சகோதரர் ஒருவர் தமிழரசியிடம் இருந்து செல்போனை பிடுங்கி எச்சரித்துள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மன வேதனை அடைந்த தமிழரசி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தமிழரசியின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து தமிழரசியின் தந்தை கருப்பையன் அளித்த புகாரின்பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாச்சூர் மழவராச்சிதோப்பு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையன். இவருடைய மகள் தமிழரசி (வயது21). இவர் ஒருவரை காதலித்து வந்தார். அந்த நபரின் நடவடிக்கை சரியில்லை எனக்கூறி தமிழரசியின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் காதலை கைவிடும்படியும் வீட்டில் கூறி உள்ளனர்.
இந்த நிலையில் தமிழரசி நேற்று முன்தினம் தனது காதலனிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவருடைய சகோதரர் ஒருவர் தமிழரசியிடம் இருந்து செல்போனை பிடுங்கி எச்சரித்துள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மன வேதனை அடைந்த தமிழரசி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தமிழரசியின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து தமிழரசியின் தந்தை கருப்பையன் அளித்த புகாரின்பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story