திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 29 Dec 2019 10:15 PM GMT (Updated: 29 Dec 2019 2:29 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை,

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மார்கழி மாதம் தொடக்கத்தில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை நடப்பதினாலும், நேற்று விடுமுறை நாள் என்பதாலும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தனர்.

கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் அய்யப்ப பக்தர்கள், மேல் மருவத்தூருக்கு செல்லும் பக்தர்களும் கோவிலுக்கு அதிகளவில் வருகின்றனர். இதனால் கோவிலில் கடந்த சில தினங்களாக கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Next Story