நாகர்கோவிலில் துணிகரம்: கோவில் கதவை உடைத்து சாமி சிலைகள் திருட்டு


நாகர்கோவிலில் துணிகரம்: கோவில் கதவை உடைத்து சாமி சிலைகள் திருட்டு
x
தினத்தந்தி 30 Dec 2019 11:00 PM GMT (Updated: 30 Dec 2019 9:29 PM GMT)

நாகர்கோவிலில் கோவில் கதவை உடைத்து வெண்கல சிலைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டாரை அடுத்த மேல சரக்கல்விளை பகுதியில் சுயம்புலிங்க சாமி கோவில் உள்ளது. இங்கு தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடைபெறும். இதில் அந்த பகுதியை ேசர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.

நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்பு வழக்கம் போல் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார்.

நேற்று காலை கோவிலுக்கு சென்ற போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பூஜை பொருட்கள் சிதறி கிடந்தன.

சிலைகள் திருட்டு

கோவிலில் இருந்த வெண்கலத்தினால் செய்யப்பட்ட விநாயகர் மற்றும் அம்மன் சிலைகள் திருடப்பட்டிருந்தன. இரவில் மர்ம நபர்கள் கதவை உடைத்து சாமி சிலைகளை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து பூசாரி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும், கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோவிலில் பதிவாகி இருந்த ேரகைகள் பதிவு செய்யப்பட்டன.

கண்காணிப்பு ேகமரா

இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமி சிலைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ேகாவில் கதவை உடைத்து சாமி சிலைகள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story