பேராவூரணியில் வாக்குப்பெட்டிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு


பேராவூரணியில் வாக்குப்பெட்டிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 31 Dec 2019 11:00 PM GMT (Updated: 31 Dec 2019 9:00 PM GMT)

பேராவூரணியில் வாக்குப்பெட்டிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 37 ஊராட்சி தலைவர், 16 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் 163 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குச்சாவடிகளில் இருந்து நேற்று முன்தினம் இரவு வாக்கு எண்ணும் மையமான பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.

அங்கு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட 3 அறைகளுக்கு நேற்று காலை 7.30 மணி அளவில் வேட்பாளர்கள், கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் அலுவலர் கோவிந்தராஜன் சீல் வைத்தார்.

பலத்த பாதுகாப்பு

வாக்குப்பெட்டிகள் உள்ள அறைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை (வியாழக்கிழமை) வாக்கு எண்ணும்போது கூட்டத்தை கட்டுப்படுத்த சவுக்கு கம்புகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Next Story