வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் கவனமாக பணியாற்ற வேண்டும் தி.மு.க. கூட்டத்தில் வலியுறுத்தல்
திருவாரூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் கவனமாக பணியாற்ற வேண்டும் என தி.மு.க. கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூர்,
திருவாரூர் நகர கட்சி அலுவலகத்தில் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சோம சுந்தரம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பூண்டி கலைவாணன், மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஆடலரசன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கவனமாக பணியாற்ற
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களாக உள்ள தி.மு.க. வினர் அனைவரும் மிகவும் கவனமாக பணியாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் தேவா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் நகர கட்சி அலுவலகத்தில் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சோம சுந்தரம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பூண்டி கலைவாணன், மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஆடலரசன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கவனமாக பணியாற்ற
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களாக உள்ள தி.மு.க. வினர் அனைவரும் மிகவும் கவனமாக பணியாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் தேவா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story