வீடு புகுந்து சிறுமி பாலியல் பலாத்காரம், போக்சோ சட்டத்தில் வங்கி ஊழியர் கைது


வீடு புகுந்து சிறுமி பாலியல் பலாத்காரம், போக்சோ சட்டத்தில் வங்கி ஊழியர் கைது
x
தினத்தந்தி 2 Jan 2020 10:30 PM GMT (Updated: 2 Jan 2020 7:31 PM GMT)

வீடு புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வங்கி ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை,

கோவை செல்வபுரம் அருகே தில்லைநகரை சேர்ந்தவர் ராம்குமார் (வயது34). இவர் கோவையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் கிரெடிட்கார்டு பிரிவில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

கோவையில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒரு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ராம்குமார் வீடு புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியதாக தெரிகிறது.

இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். உடனே சிறுமியின் பெற்றோர், செல்வபுரம் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த ராம்குமாரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான ராம்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

Next Story