தென்காசியில் பூக்கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு - அண்ணன்- தம்பி கைது


தென்காசியில் பூக்கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு - அண்ணன்- தம்பி கைது
x
தினத்தந்தி 3 Jan 2020 10:30 PM GMT (Updated: 3 Jan 2020 7:08 PM GMT)

தென்காசியில் பூக்கடைக்காரரை அரிவாளால் வெட்டிய அண்ணன்- தம்பியை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி, 

தென்காசி பூங்கொடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகிரிசாமி (வயது 45). இவர் தென்காசியில் பூக்கடை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் ஷேக் அலி (35), அவருடைய தம்பி முகைதீன் முதலாளி (34). இவர் நகைக்கடை வைத்துள்ளார். இவர்கள் தங்கள் வீட்டின் முன்பு புதிதாக சிமெண்டு தளம் போட்டு வருகின்றனர். அவர்கள் அதற்கான கட்டிட கழிவுகளை சாலையில் கொட்டியதாக கூறப்படுகிறது. இதனை அழகிரிசாமி மற்றும் அக்கம்பக்கத்தினர் அவர்களிடம் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ஷேக் அலி, அழகிரிசாமியை அரிவாளால் வெட்டினார்.

மேலும் முகைதீன் முதலாளி, அவருடைய தாய் ரைக்காள் ஆகியோர் அழகிரிசாமிக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். காயம் அடைந்த அழகிரிசாமி, சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து தென்காசி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஆடிவேல் விசாரணை நடத்தி, ஷேக் அலி, முகைதீன் முதலாளி ஆகிய இருவரையும் கைது செய்தார். ரைக்காளை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story