பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு கர்ப்பம் கலைந்ததால் உறவினர்கள் தர்ணா போராட்டம்


பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு கர்ப்பம் கலைந்ததால் உறவினர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2020 10:45 PM GMT (Updated: 4 Jan 2020 7:32 PM GMT)

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு கர்ப்பம் கலைந்ததால் உறவினர்கள் தர்ணா போராட்டம்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அதே பகுதியை சேர்ந்த ஆடுமேய்க்கும் தொழிலாளியான பழனிசாமி (வயது 65) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. மேலும் அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் இதுதொடர்பாக மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இளம்பெண்ணுக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த இளம்பெண்ணுக்கு கர்ப்பம் கலைந்து விட்டதாக கூறப்படுகிறது.இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு திரண்டனர். உறவினர்களின் அனுமதியின்றி கரு கலைக்கப்பட்டதாக கூறிய அவர்கள் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த திடீர் போராட்டம் காரணமாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story